தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கண்டுபிடிப்பு- ராகுல் காந்தி புகழாரம்
சென்னை: "5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன்" என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்ததை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளியிட்டு பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை! உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதை நாம் கம்பீரமாக சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கி வருகிறது.
இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் உலகுக்கு அறிவித்திருக்கிறேன் என கூறியிருந்தார்.
India’s rich heritage continues to inspire the world. Recent archaeological findings in Tamil Nadu reveal the use of iron over 5,300 years ago, showcasing India’s early advancements in the Iron Age.
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2025
Tamil Nadu’s contributions, along with countless milestones across our nation,… https://t.co/TJLPABHK4o
தமிழ்நாட்டின் இரும்பு பயன்பாடு- ராகுல் காந்தி புகழாரம்
இதனை தமது எக்ஸ் பக்கத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்து பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் அண்மைய தொல்லியல் துறை ஆய்வுகள் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கண்டுபிடிப்பானது, இந்தியாவின் இரும்பு கால தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை உலகுக்கு வெளிப்படுத்தி நிற்கிறது தமிழ்நாட்டின் இத்தகைய கண்டுபிடிப்புகள்.
தமிழ்நாட்டின் இத்தகைய பங்களிப்புகள், சாதனைகள் நாட்டின் ஒற்றுமை, புதுமையை எதிரொலிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகத்திலும் செழிப்புடன் வெளிப்படும் இந்திய உணர்வுகளை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications