அப்படி போடு.. "ராகுல் நாட்டின் பிரதமராவார்".. நெற்றியில் விபூதியை பூசி சொன்ன துறவி.. மிரண்ட பாஜக
ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று கர்நாடக மத துறவி ஆசிர்வதித்துள்ளார்
சென்னை: ராகுல்காந்தி பிரதமர் ஆவார் என்று கர்நாடக துறவி ஒருவர் ஆசீர்வாதம் செய்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருகராஜேந்திர மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என ஆசீர்வதித்தார்.
இன்னும் 9 மாதங்களில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை தேர்தலில் எப்படியாவது, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது..
அதிலும், 224 தொகுதிகளில் 150 தொகுதிகளையாவது கைப்பற்றி ஆட்சியமைக்க பல்வேறு வகைகளில் முனைப்பு காட்டி வருகிறது. இதன்காரணமாக, காங்கிரஸ் சார்பில் நிறுவப்படவுள்ள "வார் ரூம்" இன் சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருப்பதால், கள வேலைகள் மும்முரமாகி உள்ளன..

மடம் - துறவி
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். அந்தவகையில், இன்று சித்ரதுர்காவில் உள்ள ஜெகத் குரு ராஜேந்திர மடம் சென்று ஶ்ரீ சிவமூர்த்தி முருக சரண் அவர்களை நேரில் சந்தித்து, அவரது ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.. மடத்திற்கு ராகுல் காந்தி சென்றபோது, மடத்தின் துறவிகள் அவரை வரவேற்றனர்.. அப்போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், ராகுல் காந்திக்கு திருநீறு அணிவித்து ஆசீர்வதித்தார்...

லிங்காயத்துகள்
அப்போது, ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார் என்று அவர் ஆசீர்வதித்ததாக கூறப்படுகிறது. இந்த மடம், கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானது என்று கூறப்படுகிறது.. கர்நாடகாவில் 17 சதவீதம் லிங்காயத்துகள் உள்ளனர். இவர்கள் வழக்கமாக பாஜகவையே ஆதரிப்பார்கள்.. அப்படி இருக்கும்போது, ராகுல் பிரதமராவார் என்று ஆருடம் சொல்லி உள்ளது சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.. மடத்தைச் சேர்ந்த துறவியின் இந்த ஆசீர்வாதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சலசலப்பு
இந்நிலையில், மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருக சரண் இதுகுறித்து விளக்கம் தந்துள்ளார்.. "தங்கள் மடத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கமானதுதான், அந்தவகையில்தான் ராகுல் காந்தியை ஆசீர்வதித்தோம்" என்று கூறியுள்ளார்.. எனினும் இந்த பரபரப்பு கர்நாடகாவில் ஓயவில்லை. மடத்தில் சாமியாரை சந்தித்து, அவரிடம் ஆசி பெறும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

லிங்காயத்
அதேபோல, இந்த மடத்திற்கு ராகுல் சென்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. காரணம், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாதான் அன்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.. அதேபோல, அவருக்கு அடுத்து இப்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மையும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரே... எனவே, லிங்காயத் சமூகத்தவர்களை ஈர்க்கும் நோக்கில்தான், ராகுல்காந்தி லிங்காயத் மடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications