Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களமிறங்குது ஸ்பெஷல் டீம்.. டிக்கெட் எடுக்காமல் போனால் இனி அவ்ளோதான்.. ரயில்வே அமைச்சகம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகள் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் இதற்காக சிறப்பு டிக்கெட் செக்கிங்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் கூட, டிக்கெட் எடுக்காமல் பயணிகள் ஆக்கிரமித்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

தொலைதூரங்களுக்கு செல்வது என்றால் பயணிகள் முதலில் விரும்புவது ரயில் பயணம்தான்.. அதிலும் வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புவார்கள். சொகுசான வசதி, அசதி இல்லாமல் தொலை தூரங்களுக்கு சென்று விடலாம்.. டாய்லட் வசதி போன்றவை இருப்பதால் ரயில் பயணமே, பயணிகள் பலருக்கும் பிடித்தமானதாக உள்ளது.

train southern railway

குறிப்பாக பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை பிளான் செய்து கொள்வார்கள்.. ஆனால் சமீப காலமாக ரயில் பயணம் என்பது ரணமாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கூட, அவர்களின் சீட்களில் இருக்க இடம் கொடுக்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது.

வழக்கமாக வட மாநிலங்களில் தான் இத்தகைய கதி பயணிகளுக்கு ஏற்படும். ஆனால், கடந்த கோடை விடுமுறை காலத்தில் தமிழகத்திலும் பல ரயில்களிலும் இப்படி முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்துக் கொண்டு பயணிகள் பலரும் பயணித்தார்கள். இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த பயணிகள், தங்கள் பயணத்தை நிம்மதியாக தொடர முடியாத நிலை இருந்தது.

ரயில்வே உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் ரிசர்வ் கோச்களுக்குள் ஏறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் இதை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் இருந்தது. சொல்லப்போனால், வந்தே பாரத் ரயிலில் கூட இப்படி ஆக்கிரமித்துக் கொண்டு பலரும் பயணம் செய்தார்கள்.

அதிக கட்டணம் செலுத்தும் பிரீமியம் ரயில்களில் கூட இதுதான் நிலையா? என பயணிகள் புலம்பாத பாடுதான்.. தீபாவளி,பொங்கல் பண்டிகை காலகட்டத்தில் எப்படி இருக்க போகிறதோ என ரயில் பயணிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்து விதிமீறல்களில் ஈடுபடுவர்களை தடுக்கும் வகையில், சிறப்பு டிக்கெட் செக்கிங் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வேயின் 17 மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

டிக்கெட் இன்றி போலீசாரும் அதிக அளவில் பயணிப்பதால் அவர்களையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதி வரையும் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரையும் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் விதிமீறி பயணம் செய்பவர்களை தடுக்கும் வகையில் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த முடிவு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+