தஞ்சை, திண்டுக்கல், சேலம்.. தமிழகம் முழுக்க வெளுக்கும் மழை.. சென்னைக்கும் வாய்ப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் கனமழை பெய்வதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அளிக்கும் அதிகாரம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் வெளுக்கும் மழை! இயல்பு வாழ்க்கை முடங்கியது
டெல்டா மாவட்டங்களை தவிர்த்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.