28 மாவட்டங்களுக்கு ‘ஜில்’ செய்தி.. அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 'கூல்' தகவலைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என மக்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியை அளித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 26 முதல் 28 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications