ஹேப்பி நியூஸ்.. 13 மாவட்டங்களில் இன்று வானம் பொத்துக் கொண்டு ஊற்றும்- சென்னை வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், மதுரை முதல் தர்மபுரி மற்றும் காஞ்சிபுரம் வரை சுமார் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி விட்ட நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவுகிறது. கடுமையான புழுக்கத்தை மக்கள் உணர்கிறார்கள்.
இந்த நிலையில்தான் குளுகுளு தகவல் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் மழை
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் நாளை மழை
அது மட்டும் கிடையாது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, விருதுநகர், சேலம், மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

மக்கள் மகிழ்ச்சி
கடுமையான வெப்பத்திற்கு இதமாக இந்த மழை இருக்கக் கூடும் என்பதால் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால் ஆறுகளில் பெருமளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.

வட மாநிலங்கள் நிலைமை
டெல்லி உட்பட வடக்கு உள் மாநில பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதிக்கு முன்பாக பருவமழை கால்வைக்க வாய்ப்பு கிடையாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் பெரும் பகுதிகளில் மக்கள் கடும் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகிறார்கள்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications