பாலியல் புகார்: முதலில் இல்லவே இல்லைனு சாதித்த ராஜகோபாலன்.. ஒப்புக் கொண்டது எப்படி?
சென்னை: மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த பத்ம சேஷாத்ரி ராஜகோபாலன், பின்னர் ஆதாரங்களை காண்பித்தவுடன் ஒப்புக் கொண்டார்.
சென்னை கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக பாடம் நடத்தியதாக புகார்கள் வெளியாகின.
இந்த புகாரை அடுத்து காவல் துறை துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மடிப்பாக்கத்தில் உள்ள ராஜகோபாலனின் வீட்டில் ராஜகோபாலன், அவரது மனைவி, அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜகோபாலன்
வீட்டிலிருந்து ராஜகோபாலனின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சில தகவல்கள் அழிக்கப்பட்டன. போனிலும் அவரது கால் ஹிஸ்டரியும் அழிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விசாரணை
இதைத் தொடர்ந்து ராஜகோபாலனிடம் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தினர். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என கூறியிருக்கிறார். அதை கேட்ட போலீஸார் மாணவிகள் தரப்பில் வெளியான போட்டோக்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்களை காண்பித்தனர்.

ஒப்புக் கொண்ட ராஜகோபாலன்
இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகே தான் செய்த தவறுகளை ராஜகோபாலன் ஒப்புக் கொண்டார். ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புகார் கூறும் மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

லேப்டாப்
இதனிடையே ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னை அசோக்நகர் மகளிர் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சைபர் கிரைம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications