எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்.. ரஜினி திடீர் முடிவு... காவல்துறைக்கு கோரிக்கை!
தன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கேட்டு கொண்டுள்ளார்
சென்னை: "எனக்கென்று தனியாக போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்" என்று நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து சொல்லி இருந்தது.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இன்னமும் அதன் தாக்கம் குறையவில்லை.

துக்ளக் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது... இதனால் பல்வேறு தரப்பினர் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.. திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, ரஜினி மீது போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களும் தந்தனர்... இதனால் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. 6 போலீசார் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சமயத்தில்,சிஏஏ விவகாரம் குறித்தும் ரஜினிகாந்த் கருத்து கூறியிருந்தார்.. முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக வந்து போராடுவேன் என்றவர், டெல்லி வன்முறைச் சம்பவங்களை உளவுத்துறை கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஒருவேளை வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவேண்டும் எனவும் விமர்சித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து அவரது கருத்துக்கள் சர்ச்சையானதால், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு போடப்பட்ட பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திடீரென இன்று சந்தித்துப் பேசினார். அப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
"எனக்கென்று தனியாக பாதுகாப்பு வேண்டாம்" என்று அவரிடம் ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதையடுத்து, உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பதாக திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications