அருமை நண்பர்.. வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.. ரஜினிகாந்த் இரங்கல் டிவிட்!
சென்னை: அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் இன்று காலமானார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி இவர் மரணம் அடைந்தார்.
குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர்.. எம்பி வசந்தகுமார் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
வசந்த் குமார் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், என்று ரஜினி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ல் எம்பி வசந்தகுமார் எழுதிய 'வெற்றிப்படிக்கட்டு' என்ற புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்தும், அவரது மனைவி லதாவும் வெளியிட்டனர் என்பது குறிப்படத்தக்கது. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.