யாரையும் பகைச்சுக்காம 'நாகரீகமாக' பேட்டி... 'அடடே' ரஜினிகாந்த் ஆட்டம் தொடக்கம்?
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கமல்ஹாசன என அனைத்து தரப்பினரையும் பாராட்டும் வகையிலும் உயர்வாகவும் பேசி தமது 'நிதானத்தை' சர்ச்சையில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
அரசியல் போருக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்து ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. திடீரென தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார்.
அது சரி உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுற்றிடுச்சு என்றார். பொதுவாக நிதானத்தை பொதுக் கூட்டங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தாமல் பதற்றத்தைத்தான் ரஜினிகாந்த் இதுவரை வெளிப்படுத்தி வந்தார்.

சமூக விரோதி விமர்சனம்
அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சமூகவிரோதிகள் என விமர்சித்தது மிகக் கடும் சர்ச்சையானது. இதன் பின்னர் அரசியல் கருத்துகளை அதிகம் பேசவில்லை ரஜினிகாந்த்.

மோடியின் அழைப்பு
இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

புகழாரங்கள்
அப்போது பிரதமர் மோடியை நேரு, ராஜீவ் காந்திக்குப் பின்னர் ஆளுமை மிக்க் தலைவர் என புகழாரம் சூட்டினார். அதேபோல் ராகுல் காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலகக்க் கூடாது என்றார். மேலும் லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆட்டம் தொடக்கம்
இப்படி எந்த ஒரு தரப்பின் அதிருப்தியையும் சம்பாதிக்காமல் எல்லோரையும் மதித்த ரஜினிகாந்த் பேச தொடங்கியிருப்பது ஆச்சரியம்தான்... அதேநேரத்தில் அவரது அரசியல் கட்சி தொடக்கத்துக்கான சமிக்ஞையும் என்பதும் வெளிப்படாமலும் இல்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications