"பிரிச்சி போடு".. ரேஷனில் புது மாற்றம்.. போட்டாச்சு ரசீதுகள்.. மிஷின்களும் ரெடி.. நிம்மதியில் மக்கள்
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் ஆங்காங்கே கிளம்பின.. அதனால்தான், தமிழகத்தின் ரேஷன் கடைகளில், கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கடைகள்: எப்படியும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவக்க போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகளையும் தடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய PoS 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள நபர்களில் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கைரேகை: கார்டுதாரரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டுதுமே, இந்த கருவியில் பதிவு செய்யப்படும்.. பிறகு, விற்பனை விபரம் அனைத்தும் கார்டுதாரர் மொபைல் போன் எண்ணுக்கு, மெசேஜ் மூலம் அனுப்பப்படுகிறது.
கை ரேகை பதியப்பட்டு, பொருட்கள் வழங்கப்படும்போது ரேஷன்தாரர்கள் கேட்கும் பொருள்களுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில இடங்களில் இந்த உத்தரவு செவிசாய்க்கப்படவில்லை... வாங்காத பொருட்களையும், வாங்கியது போல் பதிவு செய்து, சில கடை ஊழியர்கள் முறைகேடு செய்வதாக புகார்கள் கிளம்பின.
எச்சரிக்கை: அதனால்தான், இது தொடர்பாக பலமுறை துறைரீதியாக வார்னிங் தரப்பட்டது.. "வாங்காத பொருட்களை வாங்கியது போல் பில் போடப்பட்டதாகக் குறுஞ்செய்தி பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தால், கடை ஊழியர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவி, பிரின்டர் வசதியுடன் கூடிய புதிய விற்பனை முனைய கருவி வைக்கும் பணி, இந்த மாத துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது..
ரசீது: இதனால், ரசீதை பார்த்து, வாங்கிய பொருட்களின் விபரத்தை கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ள முடியும்.. இப்போது, சென்னை உட்பட மாநிலம் முழுதும், 2,750 ரேஷன் கடைகளில் புதிய கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. வரும் 2024 ஜூன் மாதத்திற்குள், எஞ்சியிருக்கும் 33,000 கடைகளிலும், அந்த கருவி வைக்கும் பணியை முடிக்குமாறு, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், உணவு துறை தெரிவித்திருக்கிறதாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications