ரேஷன் கடைகளுக்கு பறந்த மேஜர் உத்தரவு.. தமிழக அரசின் இன்னொரு அதிரடி.. ஹப்பாடா.. நிம்மதியில் மக்கள்
சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. இதையடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியும் ஏற்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
சக்கரபாணி: அதேபோல, பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? ரேஷன்தாரர்களுக்கு முறையாக கிடைக்கின்றனவா? என்பது உட்பட ரேஷன் கடைகளில் தடையற்ற மற்றும் தரமான சேவையை வழங்க பல நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்புகூட, அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை, கார்டுதாரர்களுக்கு உடனுக்குடன் வினியோகம் செய்ய வேண்டும்.. ஒருவேளை, அதன் தரம் குறைவாக இருந்தால், உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும்.. எக்காரணம் கொண்டும் பொருட்கள் தேங்கியிருக்க கூடாது என்றும் தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு காரணம், ரேஷன் கடையில் தேங்கியிருக்கும் பொருட்கள் குறித்து சில புகார்கள் எழுந்தன.. அதாவது, சிலர் தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லை என்றும், இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டன..
பெருத்த நம்பிக்கை: இத்தகைய புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.. இந்நிலையில், மற்றொரு அதிரடியை கையில் எடுத்துள்ளார் அமைச்சர்.
அதன்படி, கிடங்கிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் தரமாக பெறப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கு பிறகே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்..
அடுத்த அதிரடி: மேலும், தரமற்ற பொருள்களை வழங்க கூடாது, பொது மக்களுக்கு பொது விநியோக திட்ட பொருள்களை விநியோகம் செய்யாமல் இருப்பதால் இறுதி இருப்பு அதிகளவில் காட்டப்படுகிறது, எனவே, அதிக அளவில் சரக்கு இருப்பு வைப்பதை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைதவிர, மேலும் சில உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பறந்துள்ளன.. குறிப்பாக, "ரேஷன் கடைகளில் காலதாமதமாக பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் பெருகுவதால், மக்களுக்கு பொருள்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.. அதே போல 3 மாதத்திற்கு மேல் துவரம் பருப்பு இருப்பு உள்ள அங்காடிகளின் பட்டியல் MIS PORTAL -ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.. எனவே, அங்காடியில் தேக்கத்தில் உள்ள பொருட்கள் தரமற்றதாக இருந்தால் குடோனில் மாற்றி நடப்பு மாதமே விற்பனை செய்து விடுங்கள்..
பெருத்த நம்பிக்கை: விற்பனை செய்யும் பணியாளர்கள் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும்... இது மிகவும் அவசியமான ஒன்று.. சமூக வலைதளங்களில் புகார்கள் வராத வண்ணம் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.. இதனை பொது விநியோக திட்ட கள அலுவலர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications