Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களுக்கு.. குட்நியூஸ் வருதா? ரேஷனில் இதெல்லாம் இலவசமா? தமிழக அரசு எடுக்கும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களும், மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வருகிறார்கள்.. இந்நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Ration card holders and Will the Tamil Nadu government provide free ration items to the 4 districts including Chennai

புயல்: சென்னையை உலுக்கிஎடுத்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது

அதேபோல, பேய்மழை கொட்டியதில், தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டது.. இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் என பாழாகிவிட்டன..

4 மாவட்டங்கள்: இதில் ஏராளமான சான்றிதழ்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்து விட்டன. அதனால்தான், சென்னையில் நாளை முதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல, மழைநீரில் சொத்து பத்திர ஆவணங்கள் நனைந்துவிட்டதால், நகல் ஆவணங்களை வழங்க பத்திரப்பதிவு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும், மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் தந்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ரேஷனிலும் சிறப்பு சலுகையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பி உள்ளது.

கடும் புயல்: தமிழக ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதைத்தவிர 2 கிலோ சர்க்கரை, 50 ரூபாய்க்கும், துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுன்றன. இதனால், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நேரடியாகவே பயனடைந்து வருகிறார்கள்.

கடந்த வாரம் வீசிய புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீர் வீடுகளில் புகுந்தது. ஒருவாரம் கடந்தும்கூட, சென்னை புறநகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் என்று பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கடைகளில், அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்குமாறு, தமிழக அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன்தாரர்கள்: இந்நிலையில், ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் 6000 ரூபாய் வெள்ள நிவாரணம் கிடைக்குமா? கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்ற குழப்பம் எழுந்தது..

ஆனால், சென்னையில் உள்ள அனைவருக்குமே வெள்ள நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை கார்டு இல்லாதவர்கள், கேஸ் சிலிண்டர் ரசீது, வீட்டு வாடகை பத்திரத்தை பயன்படுத்தி வெள்ள நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+