Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டைதாரர்களின் குமுறல்.. ரேஷனில் புதுஸா வந்த சிக்கல்? சர்வர் வேற ஸ்லோ.. அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் புகார்கள், முறைகேடுகள், கோரிக்கைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்து வருகின்றன. எனினும், ஆங்காங்கே சில ரேஷன் கடைகள் குறித்து, குடும்ப அட்டைதாரர்கள் புகார்கள் கூறுகிறார்கள். ஒருசில இடத்தில் சர்வர் பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு 2 விதமான வேண்டுகோள்களை பொதுமக்கள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால், ரேஷன்தாரர்களின் இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அலர்ட் செய்யப்பப்ட்டிருந்தது.

Ration Ration card holders TN GOV

குடும்ப உறுப்பினர்கள் பதிவு

அதேபோல, ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி பதிவு செய்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையை மே 31க்குள் பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான், அரிசி, பிற மானியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு வழங்கும். இதற்கான கைரேகை பதிவு அனைத்து ரேஷன் கடைகளிலும் நடந்து வருகிறது.

ஆனால் சில விற்பனையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய சென்றால் பொருட்கள் ஸ்டாக் இல்லை, நாளைக்கு வாங்க என்று திருப்பி அனுப்புகிறார்களாம்.

கைரேகை - ஆதார் அட்டை

அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆதார் அட்டையுடன் ரேஷன் கடையில் பதிவு செய்தால் தான் ஆதார் பதிவு செய்யப்பட்டது என்பது உறுதியாகும்.. அப்படியிருக்கும்போது, குடும்ப உறுப்பினர்களால், தினமும் வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.. இதனால், கைரேகை பதிவும் தவறவிடும் நிலைமை வருகிறது" என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து பொது விநியோகத்துறை தரப்பில் சொல்லும்போது, "கைரேகை விழாவிட்டால் குறைந்தது கருவிழி ரேகையை பதிவு செய்ய வேண்டியது விற்பனையாளரின் கடமை... இதுகுறித்து தாசில்தார்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும், ரேஷன் அட்டைதாரரை அலையவிடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. கார்டுதாரர்கள் தாமதமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையோடு சென்று விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

பிஎஸ்ஓ மிஷின்கள்

இதற்கு நடுவில், சில ரேஷன் கடைகளில், சர்வர் பிரச்னையால், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படவில்லையாம்.. இதனால் ரேஷன்தாரர்களுக்கு உடனுக்குடன் பொருட்கள் வழங்க முடியவில்லை என்ற புகார் வெடித்துள்ளது..

இதற்காக கார்டுதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை வந்துவிடுவதால், ஊழியர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தும் நிலைமை ஏற்படுகிறதாம். எனவே, உயரதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+