ரேஷன் அட்டைதாரர்களின் குமுறல்.. ரேஷனில் புதுஸா வந்த சிக்கல்? சர்வர் வேற ஸ்லோ.. அரசுக்கு கோரிக்கை
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் புகார்கள், முறைகேடுகள், கோரிக்கைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்து வருகின்றன. எனினும், ஆங்காங்கே சில ரேஷன் கடைகள் குறித்து, குடும்ப அட்டைதாரர்கள் புகார்கள் கூறுகிறார்கள். ஒருசில இடத்தில் சர்வர் பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு 2 விதமான வேண்டுகோள்களை பொதுமக்கள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால், ரேஷன்தாரர்களின் இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அலர்ட் செய்யப்பப்ட்டிருந்தது.

குடும்ப உறுப்பினர்கள் பதிவு
அதேபோல, ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி பதிவு செய்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையை மே 31க்குள் பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான், அரிசி, பிற மானியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு வழங்கும். இதற்கான கைரேகை பதிவு அனைத்து ரேஷன் கடைகளிலும் நடந்து வருகிறது.
ஆனால் சில விற்பனையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய சென்றால் பொருட்கள் ஸ்டாக் இல்லை, நாளைக்கு வாங்க என்று திருப்பி அனுப்புகிறார்களாம்.
கைரேகை - ஆதார் அட்டை
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆதார் அட்டையுடன் ரேஷன் கடையில் பதிவு செய்தால் தான் ஆதார் பதிவு செய்யப்பட்டது என்பது உறுதியாகும்.. அப்படியிருக்கும்போது, குடும்ப உறுப்பினர்களால், தினமும் வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.. இதனால், கைரேகை பதிவும் தவறவிடும் நிலைமை வருகிறது" என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து பொது விநியோகத்துறை தரப்பில் சொல்லும்போது, "கைரேகை விழாவிட்டால் குறைந்தது கருவிழி ரேகையை பதிவு செய்ய வேண்டியது விற்பனையாளரின் கடமை... இதுகுறித்து தாசில்தார்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும், ரேஷன் அட்டைதாரரை அலையவிடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. கார்டுதாரர்கள் தாமதமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையோடு சென்று விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும்" என்கிறார்கள்.
பிஎஸ்ஓ மிஷின்கள்
இதற்கு நடுவில், சில ரேஷன் கடைகளில், சர்வர் பிரச்னையால், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படவில்லையாம்.. இதனால் ரேஷன்தாரர்களுக்கு உடனுக்குடன் பொருட்கள் வழங்க முடியவில்லை என்ற புகார் வெடித்துள்ளது..
இதற்காக கார்டுதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை வந்துவிடுவதால், ஊழியர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தும் நிலைமை ஏற்படுகிறதாம். எனவே, உயரதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications