“விஜய் கட்சி தொடங்கியதே எங்களுடன் கூட்டணி வைக்கத்தான் போல” - விசிக எம்பி ரவிக்குமார்
சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், "விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை வைக்கத்தான் போல" என விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ந்நதம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சந்துரு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், விசிக நிர்வாகி ஆதவ அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாக தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்க மாட்டார் என்று பின்னர் அறிவிப்பு வெளியானது.

இப்படி இருக்கையில் இன்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை அரசியல் தளத்தில் கிளப்பியிருந்த நிலையில், திருமாவளவன் இதற்கு விளக்கமளித்திருந்தார். அதில், "விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து விசிக எம்பி ரவிக்குமார், "விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை வைக்கத்தான் போல" என்று விமர்சித்துள்ளார். அதாவது, "தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து 'அழைப்பு' விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள்.
'விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே' என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது" என்று தனது x தளத்தில் பதவிட்டுள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications