ரியல் எஸ்டேட்டை விடுங்க.. கட்டுமான திட்ட அனுமதி கட்டணம்.. நகராட்சி நிர்வாகம் போட்ட உத்தரவை பாருங்க
சென்னை: மாநகராட்சி நகராட்சிகளில் கட்டுமான திட்ட அனுமதிக்கான கட்டணங்களை 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பான சில அறிவுறுத்தல்களையும் வழங்கியிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
- பொது கட்டட விதிகள் அடிப்படையில் மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் கட்டுமான திட்ட அனுமதி பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ளwww.onlineppa.tn.gov.inஇணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும்

- எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ 'ஆப்லைன்' முறையிலோ கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை பெறக்கூடாது. விண்ணப்பதாரர் குறைந்தபட்ச ஆவணங்களை முதல்கட்டமாக பதிவேற்றம் செய்து இருக்கலாம்...
- ஆனால் 'செக்லிஸ்ட்' எனப்படும் சரிபார்ப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டபின் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். இதற்கு வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் ஒவ்வொரு நிலை அதிகாரியும் தங்கள் குறிப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில் அந்த விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கட்டணங்களை கணினி வாயிலாக கணக்கீடு செய்ய வேண்டும். இந்த விபரங்களை விண்ணப்பதாரருக்கு 'இ மெயில்' வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
- இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டதில் இருந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கால கெடுவில் கட்டணம் செலுத்தப்படவில்லை எனில் அது குறித்து நினைவூட்டலை அடுத்த 7 நாட்களுக்கள் அனுப்பி அந்த கோப்பை முடிக்க வேண்டும்
- ஆன்லைன் முறையில் குறிப்பிட்ட தலைப்புகளில் விண்ணப்பதாரர் செலுத்தும் கட்டணங்களில் நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு செல்ல வேண்டிய தொகையை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும். இதே போன்று தொழிலாளர் நல நிதியை கட்டுமான தொழிலாளர் நல நிதியத்துக்கு அனுப்ப வேண்டும்
- இதே போன்று தொழிலாளர் நல நிதியை கட்டுமான தொழிலாளர் நல நிதியத்துக்கு அனுப்ப வேண்டும்
- பிற துறைகளுக்கு செல்ல வேண்டிய நிதியை மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் தங்கள் பொது நிதி கணக்கில் சேர்க்க கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications