Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடியோ கேமராவை ஆன் செய்துட்டு,பெண் செய்த ரியல் சம்பவம்.. அந்த 1 நிமிட காட்சியை கண்டு ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட முயன்ற போது, இளம்பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் இப்படியான ரீல்ஸ் மோகம் உயிரை பறித்து வருவது பெரும் கவலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.. என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்...

UP woman reels hanging reel

ரீல்ஸ் வீடியோக்கள்

குறிப்பாக, குறுகிய கால வீடியோக்களான ரீல்ஸ் எடுப்பதில் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மோகத்தில் பல நேரங்களில் மக்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில்தான் இப்போதும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பரிதாபகரமான சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வசித்து வந்தார். அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதற்காக எப்போதும் வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து அப்லோடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சம்பவ தினத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது, ஒரு புதிய ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். அதாவது அவர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சியை வீடியோ எடுத்து பதிவிட திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் வீட்டில் இருந்த ஒரு துணியை பயன்படுத்தித் தூக்குக் கயிறு போல தயார் செய்து, அதனை உயரத்தில் கட்டி உள்ளார்.

நிஜமான தூக்கு கயிறு

வீடியோவை பதிவு செய்யத் தன்னுடைய செல்போனை தகுந்த இடத்தில் வைத்துவிட்டு, ரீல்ஸ் சீனில் நடிக்க ரெடியானார்.. அப்போது துரதிர்ஷ்டவசமாக அவர் கட்டியிருந்த கயிறு போன்ற அமைப்பு அவரது கழுத்தை திடீர்னு இறுக்கிவிட்டது.. அதிலிருந்து தப்பிக்க அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

எதிர்பாராத விதமாக அந்தப் பெண் நிஜமாகவே தூக்கில் தொங்கும் நிலை உருவானது. அந்த சமயத்தில் வீட்டிலும் உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தே போனார்.

சிறிது நேரம் கழித்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது, அந்தப் பெண் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்..

அந்த 5 நிமிடம்

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ரீல்ஸ் எடுக்கும் போது ஏற்பட்ட தவறால் இந்த விபத்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இளம்பெண்ணின் மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது...

சோஷியல் மீடியா ரீல்ஸ் மோகத்தில் ஓர் இளம் உயிர் இப்படி வீணாகப் போனது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ரீல்ஸ் எடுக்கும் போது போதிய பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் அல்லது ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும், புகழ் பெற வேண்டும் என்ற பேராசையில் உயிரை பணயம் வைக்கும் இதுபோன்ற செயல்களை ஜீரணிக்கவே முடியவில்லை...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+