அன்றே கணித்த திருமாவளவன்.. ஆளூர் ஷாநாவாஸுக்கு சீட் கொடுக்காததற்கு இதுதான் காரணம்!
சென்னை: தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக விஜய்க்கு விசிக ஆதரவு அளிக்குமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸ் அளித்திருக்கும் பேட்டி கவனம் பெற்றிருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் நேரடியாக களமிறங்கியிருந்தார். ஆனால், திடீரென போட்டியிடுவதை வாபஸ் வாங்கிக்கொண்டார். அந்த இடத்தில் ஜோதிமணி என்பவர் களமிறக்கப்பட்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஆளூர் ஷாநவாஸுக்கம், எஸ்.எஸ்.பாலஜிக்கும் சீட் கொடுக்காததுதான். இது திருமாவளவன் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் கட்சியின் கொள்கைகளையும், மதச்சார்பற்ற கூட்டணியின் கருத்துக்களையும் பரவலாக கொண்டு சென்றவர்கள். அதிலும் ஷாநாவாஸின் பேச்சுக்கள், எதிர்க்கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும். இருந்தும் கூட ஏன் அவருக்கு திருமாவளவன் வாய்ப்பு அளிக்கவில்லை? என்று கேள்விகள் எழுந்திருந்தன.
பலரும் திருமாவளவனை இது குறித்து விமர்சித்திருந்தனர். நல்ல வேட்பாளரை திருமாவளவன் களமிறக்காமல் தவிர்த்திருக்கிறார் என்று கூறியிருந்தனர்.
இப்போது களம் மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விஜய் பக்கம் போய் இருக்கிறது. விஜய்க்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், விசிகவின் ஆதரவும் இடதுசாரிகளின் ஆதரவும் அவசியம். எனவே விரைவில் விசிக விஜய் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஷாநாவாஸ் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் செய்தது தவறு என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் உடன் இருந்தது திமுகதான். பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு நம்பிக்கையான பாட்னர் இல்லாதபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திமுக உடன் இருந்தது. மற்ற கூட்டணி கட்சிகள் யாரும், ஏன் காங்கிரஸே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாதபோது, திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை முன்னிறுத்தினார்.
காங்கிரஸ் கைவிடப்பட்ட நிலையில் திமுக உடன் நின்றது. ஆனால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது காங்கிரஸ் முதல் ஆளால் விஜய் உடன் கூட்டணிக்கு சென்றுவிட்டது. நம்பிக்கை துரோகம் இது என்று ஷாநாவாஸ் பேசியிருக்கிறார்.
விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில், ஒரேயடியாக காங்கிரஸை அட்டாக் செய்து பேசியிருப்பது விசிக தலைமைக்கு டென்ஷன் ஏற்றிருக்கிறது. இவரது பேச்சால் தவெக-விசிக கூட்டணி தாமதமாகவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் ஷாநாவாஸை திருமாவளவன் முன் நிறுத்தாததற்கு காரணம், ஷநாவாஸ் திமுகவிடம் போய்விட்டார் என்பதால்தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இப்போது ஷாநாவாஸ் பேசுவதை பார்க்கும் போது அது உண்மைதானோ? என்கிற கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications