சென்னையில் நில அதிர்வு.. யாருக்கு என்ன ஆச்சோ.. வெளியூர்வாசிகள் பதட்டம்.. விசாரிப்பு
நிலஅதிர்வு ஏற்பட்டதால் வெளியூர்வாசிகள் பதட்டமடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: இன்று காலை சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறித்து சிலர் இணையத்தில் இது சம்பந்தமான விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரில் இருக்கும் உறவினர்கள் பதட்டமடைந்தனர்.
இன்று காலை 7 மணி அளவில், சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகவும் பதிவானது. சென்னையில் சில இடங்களில் இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும், இதனால் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தி.நகர் பகுதி
இது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

பதட்டம்
சென்னையில் பிள்ளைகள், உறவினர்கள் தங்கி படித்து வருவதால் வெளியூர்வாசிகள் மிகுந்த பதட்டமடைந்து விட்டனர். உடனடியாக அவர்களை செல்போனில் கூப்பிட்டு நலம் விசாரித்தும், நில அதிர்வு குறித்து கேட்டு வருகின்றனர். கூடவே பாதுகாப்பாக இருக்கும்படியும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

புது தகவல்கள்
சென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டதாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் புது தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலக்கம்
இந்த நில அதிர்வினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் சென்னைவாசிகள் சிலர் இன்னும் பதட்டம் நிறைந்த கலக்கத்துடனேயே உள்ளனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications