கொடூரத்தின் உச்சம்.. நெல்லை, தூத்துக்குடி செல்லும் நிவாரணப் பொருட்கள் வழிப்பறி! உடனே வந்த போலீஸ்
சென்னை: தென் தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த பெரு மழையின் தாக்கம் காரணமாக 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி இருக்கும் நிலையில், அங்கு நிவாரண பொருட்களுடன் செல்லும் வாகனங்களை வழிமறித்து பொதுமக்கள் பறிப்பதாக சமூக ஆர்வலர் வாசு சுமதி பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், "திருநெல்வேலி தூத்துக்குடி பாதையில் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நெடுஞ்சாலையில் இயக்கப்பட்ட ஐந்து பேருந்துகளையும், கோரம்பள்ளம், அந்தோனியார்புரம் மக்கள் நிவாரணம் கேட்டு வழிமறித்து நிறுத்தி விட்டனர்.

தூத்துக்குடி நெல்லை நெடுஞ்சாலை மறவன் மடத்தில் மரத்தை வெட்டி போட்டு குடிநீர், மின்சாரம் வழங்க வேண்டி மறியல் செய்கிறார்கள். தூத்துக்குடி பொன்னாங்குறிச்சி மக்கள் நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியை இடைமறித்து அதிலுள்ள பாய் போர்வை போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு லாரியை அனுப்பி வைத்தனர். மக்கள் நிலைமை நன்றாக புரிகிறது, ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் அல்லவா நமக்கு உதவி செய்ய வேண்டும்.
இதே நிலைமையை கஜா புயலின் போது வேதாரண்யத்தில் கண் கூடாக பார்த்தேன். ஏதோ சில பெரிய தலைகள் நமக்கு அப்போது பின்புலத்தில் இருந்ததால் தப்பித்தோம். நண்பர்களே இது பேரழிவு, அரசு செய்ய வேண்டியதை செய்யும். அதுவரை தன்னார்வலர்களை களத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் சமூக ஆர்வலர் கிரித்திகா தரண் வெளியிட்ட பதிவிலும், "பொருட்கள் பறிப்பு அரசுக்கு தெரிவிங்க. தூத்துகுடியில் திட்டமிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மக்களை??? நிறுத்தி வைத்து பறிக்க வைக்கிறார்கள். இப்பொழுது போலிஸ் பாதுகாப்புடன் செல்கிறோம். இது போகும் வழியில் பல இடங்களில் நிற்கிறது. தன்னார்வலர்களுக்கும் ஆபத்து. போலிஸ் தீவிர நடவடிக்கையில் இருந்தாலும் மக்கள் என நினைத்து விடுவார்கள்.
அங்கு பின்புலமாய் சில ஸ்கார்ப்பியோக்களால் அடையாளம் கண்டு கொண்டேன். இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குவதும் பொருட்கள் உரிய இடத்தில் கொண்டு சேர்க்க உதவனும். டாட்டா ஏசில் போலிஸ் இருவர். என்ன சோதனை? பத்து பேர் சேர்ந்து தெருவில் நிற்காமல் தடை செய்வது முக்கியம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இப்பதிவை பகிர்ந்து உள்ள வாசு சுமதி, "இது அரசுக்கு அவப்பெயர் வராமல் இருக்க செய்கிற ஒரு நற்செயலாக இருந்தாலும், இது பத்தாது - இன்னும் தீவிரம் தேவை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications