ஆதார் கார்டு இருக்குல்ல? ரேஷன் அட்டை ரத்தாகிடும்.. இனி எதுவுமே வாங்க முடியாது.. இன்றே கடைசி பாருங்க
சென்னை: மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்திலேயே ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டிருக்கிறது.. இந்த பணியை செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
ரேஷன் கார்டு என்பது வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
உதவிகள்: இதுமட்டுமில்லாமல், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன..

ரேஷன் அட்டைகள்: அந்தவகையில், தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயனாளிகள் ரேஷன் வாங்குகின்றனர்... இந்த ரேஷன் கார்டுகள் இருந்தால்தான், அரசின் உதவிகளை எளிதாக பெற முடியும்... அதேபோல, பொங்கல் பரிசு தொகுப்பு, தீபாவளி பரிசு தொகுப்பு, வெள்ள நிவராணம் பெறுவதற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
அதனால்தான், ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், போலி ரேஷன் அடைகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துவிட்ட நிலையில், மோசடிகளும் பெரிய அளவில் நடப்பாக தெரிகிறது. இந்த மோசடிகளை தடுத்து, அரசின் திட்டங்களும், உதவிகளும், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டது
விரிவாக்கம்: Know Your Customer என்பதுதான் Kyc-யின் விரிவாக்கமாகும்.. கேஒய்சி என்பது தங்களது அடையாளங்களை சமர்பிப்பதாகும்... எனவே, ஆதார் நம்பர், செல்போன் நம்பர், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன்கடைகளில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் என்றால், மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்.. அங்கு இகேஒய்சி இணைப்பை காணலாம். அதில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் செல்போன் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பிறகு நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் நிலையில் அதனை பதிவிட வேண்டும்.
ஆதார் நம்பர்: பிறகு ஆதார் நம்பரை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஆதாரருடன் இணைந்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும்.
ஒருவேளை இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளுக்கும் சென்று இந்த செயல்பாட்டினை முடிக்கலாம். அல்லது மத்திய அரசின் இ்ந்த https://nfsa.gov.in/sso/frmPublicLogin.aspx இணையதளம் மூலமாகவும் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இன்றுடன் கடைசி: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினரின் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்படவில்லையானால், ரேஷன் கார்டில் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்படும். அதன் பிறகு அவருடைய பங்கில் ரேஷன் பொருட்களை இனி வாங்க முடியாது. ரேஷன் கார்டும் அவர்களுக்கு நீக்கப்பட்டுவிடுமாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications