டெல்லியில் நடைபெற்ற மதநல்லிணக்க மலர்ப் பேரணி! தமிழ்நாடு கலைக்குழுவுக்கு முதல் பரிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் நடைபெற்ற மதநல்லிணக்க மலர்ப் பேரணியில் தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத நல்லினக்கத்தினை வலியுறுத்தி டெல்லியில் மலர்ப் பேரணி நடத்தப்படுவது வழக்கமாகும்.

Religious Harmony Flower Rally held in delhi

டெல்லியில் மத நல்லினக்கத்தினை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் "மத நல்லினக்க மலர்ப் பேரணி" மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடந்த வாரம் அன்று மேஹ்ருளி பகுதியில் நடைபெற்றது.

அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்மலர்ப் பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பாக 25 கலைஞர்கள் கொண்ட கலைக் குழுவினர் அலங்கார மலர்ப் பதாகைகள் தாங்கி, கலை நிகழ்சிகளை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களை, தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையக் குழுவினர் வழங்கிய கலை நிகழ்ச்சி மிகவும் கவர்ந்த வண்ணமாக அமைந்தது. தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இவ்விழாவில், டெல்லி முதலமைச்சர் சார்பில் கலந்துகொண்ட டெல்லி மேஹ்ருளி சட்டமன்ற உறுப்பினர் நரேஷ் யாதவ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களை பாராட்டினார்.

கடந்த ஆண்டுகளில் பங்குபெற்ற மாநிலத்தின் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு பங்கேற்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 2022 தமிழ்நாடு கலைக்குழுவிற்கு முதல் பரிசு பெற்றதாக தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+