அக்டோபர் 2.. தேசம் காத்த தலைவர்களின் நாள்!
சென்னை: அக்டோபர் 2 -தேசப்பிதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல நம் தேசத்தின் தலைசிறந்த மாமனிதர் லால் பகதுார் சாஸ்திரியின் பிறந்தநாளும் ஆகும்.
1904ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் மொகல்சாரி என்ற கிராமத்தில் சாரதா ஸ்ரீவத்சவா ராம்துலாரி தேவி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நாட்டின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தன் பதினாறு வயதில் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.

பள்ளிப்படிப்பைத் துறந்து முழு நேரமாக மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். பிறகு அங்குள்ள காசி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொள்கைகளைப் பயின்று காந்தியடிகளின் கையால் சாஸ்திரி என்ற பட்டம் பெற்றார். காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற போது ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்திரப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய கடின உழைப்பாலும் தனித்திறமையாலும் நேருவின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது ஒரு ரயிலில் ஏற்பட்ட விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார். அவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த போது அவருடையக் கட்சி 1952,1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றது. முப்பது ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கை.
பாரத ரத்னா விருதுக்குச் சொந்தக்காரர். சுதந்திர இந்தியாவின் தலைச்சிறந்த இரண்டாவது பிரதமராவார்.இந்தியா சீனா இடையே டாஷ்கன்ட் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போரைத் தடுத்தவர். கடின உழைப்பு பிரார்த்தனைக்குச் சமம் என்று கூறியவர். காந்தியடிகளின் கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர். 1966ஆம் ஆண்டு பாரதத்தின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மகாத்மா காந்தியை நினைவு கூறும் அதே நாளில் லால் பகதூர் சாஸ்திரியையும் மனதில் ஏந்தி நன்றி சொல்லுவோம்.
- உமா.ஜி
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications