சென்னை ஓட்டலில் வாடகை காதலிகள்.. தி நகர் பிரபல பாரில் கெட்ட ஆட்டம்... டோக்கனில் இருக்கு விஷயம்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் இயங்கும் பாரில் புதிய விதமான கலாச்சார சீரழிவுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக ஆண், பெண் ஜோடியாக கலந்து கொள்ளும் சில பப் மற்றும் பார்களில் பெண்கள் இல்லாமல் ஆண்களை மட்டும் அனுமதிக்க மாட்டார்கள்.. ஜோடியாக பங்கேற்கும் ஓட்டலில் ஜோடியாக பங்கேற்க முடியும். ஆனால் குறிப்பிட்ட தி நகர் பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கடந்த 20 வருடங்களில் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. ஏற்கனவே வளர்ந்த நகரமான சென்னையில் பணக்காரர்களுக்கு பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது.. ஏழைகளுக்கோ அதிகரித்து வருகிறது. அதாவது ஒருபக்கம் லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் அதிகமாக இருக்கிறார்கள்.

மறுபக்கம் 20000, 30000 சம்பளம் வாங்கவே போராடும் சமூகமும் அதிகமாக இருக்கிறது. மிக அதிகமாக சம்பளம் வாங்குவோரில் பலரது வாழ்க்கை முறை வேறு மாதிரியாக இருக்கிறது. வார இறுதியில் ஈசிஆரில் உல்லாச மது விருந்து அல்லது பார்களில் ஜோடியாக மது விருந்து, கிளப்களில் நடனம் மற்றும் மது விருந்து என உற்சாகமாக இருக்கிறார்கள்.
மது விருந்துடன் நடனம்
வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனி அல்லது ஞாயிறு இரவு சென்றால், கிளப்களிலும், பப்களிலும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடுவதை பார்க்க முடியும். நல்ல சாப்பாடு அத்துடன் மது விருந்து கூடவே நடனம் என்று கொண்டாடுவார்கள் பலர். இது சென்னையில் மட்டுமல்ல, பெங்களூர், கோவை, கொச்சின், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, அஹமதாபாத், கொல்கத்தா உள்பட இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஊர்களில் சர்வ சாதாரணமாக இருக்கும்.
வாடகை காதலிகள்
சென்னையில் உள்ள பப்களில் இளம் ஜோடிகள் பங்கேற்று மது விருந்தில் ஆடுவார்கள்.. அதேபோல் குடும்பமாக பங்கேற்கும் மதுபான பார்களை பொறுத்தவரை ஜோடியாக பங்கேற்று மது விருந்தில் ஆடுவார்கள்.. மது அருந்தி உற்சாகமாக இருப்பார்கள்.. அப்படி ஜோடியாக பங்கேற வேண்டிய பார்களின் நேரத்தில் பேச்சுலர்களுக்கு அனுமதி கிடையாது. இதுதான் பல பார்களில் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் தி நகரில் உள்ள ஒரு தனியார் பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டோக்கன் அடிப்படையில் காதலிகள்
அதாவது பாரில் பங்கேற்கும் பேச்சுலர்கள் ஜோடியாக பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் விதமாக திநகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைக்கிறார்கள். அந்த காதலிகள் பாரில் மது அருந்திவிட்டு ஆண்களுடன் நடனம் ஆடுவார்கள்.. சில நிமிடங்கள் காதலியாக வாழ்ந்துவிட்டு செல்வார்களாம்... அதாவது யார் என்னவென்றே தெரியாத ஆணுக்கு அங்கு வாடகை காதலி கிடைப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தால் டோக்கன் அடிப்படையில் காதலிகள் கிடைப்பார்களாம்.
1000 கட்டணம்
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ள குறிப்பிட்ட தனியார் பார், தினமும் இரவு 7.30 மணிக்கு செயல்பட தொடங்குகிறதாம். இந்த பாரில் செல்வதற்கு நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.. ஜோடியாக வராத பேச்சுலர்கள் உள்ளே சென்றதும் அங்கு தயாராக உள்ள வாடகை காதலிகளை டோக்கன் பெற்று அழைத்து சென்று ஜோடியாக ஆட்டம் போடலாம் என்கிறார்கள்.. ஒரு வாடகை காதலிக்கு 200 ரூபாயாம். சில நிமிடங்கள் நடனம் ஆடுவார்களாம்.
பெண்களுடன் நடனம்
இதை கேள்விப்பட்ட பல ஆண்கள், மதுஅருந்திவிட்டு உற்சாக நடனம் ஆட டோக்கன் பெற்று அந்த பெண்களுடன் மது அருந்துவிட்டு ஆடுகிறார்களாம். டோக்கன் காதலிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார்களாம்.. மணிக்கணக்கில் ஆடும் பலர், இதற்காக பணத்தை டோக்கன் டோக்கனாக எடுத்து கொட்டுகிறார்களாம்.. சில மணி நேரம் பெண்களுடன் உற்சாக நடனம் ஆடுவதற்காக பல ஆயிரங்களை ஆண்கள் செலவு செய்கிறார்களாம்.
காவல்துறை நடவடிக்கை
இந்த பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இப்படி நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அவர்கள் யார் என்று தெரியாதவர்களுக்கு சில நிமிடங்கள் வாடகை காதலிகளாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் விருப்பம் உள்ள சில பெண்களிடம் நள்ளிரவுக்கு மேல் சிலர் பணம் கொடுத்து அத்துமீறுவதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications