ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்..!
சென்னை: ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர் எஸ்.கே.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் தற்போது இணைவது நான்காவது கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தமிழ்மாநில காங்கிரஸ், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளில் 4 கட்சிகளுக்கு இவர் மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.
நீதித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் அவர்களது பதவிக்காலத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளில் இணைவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணமாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பாஜக சார்பில் எம்.பி.யாக உள்ள ரஞ்சன் கோகாயை கூறலாம்.
இதேபோல் மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பின் கேரள ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திமுகவில் இணைந்த எஸ்.கே. கிருஷ்ணனுக்கு அக்கட்சியின் சட்டத்துறை நிர்வாகிகள் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications