பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்.. பென்ஷன் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
சென்னை: ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டில் இருந்த நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் 20 வருடங்கள் செய்திஆசிரியர், உதவி ஆசிரியர், செய்தியாளர், புகைப்பட கலைஞர் மற்றும் பிழை திருத்துனர் ஆகிய துறைகளில் பணியாற்றி இருந்தால் தகுதியின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றதும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்தார். மேலும் பத்திரிகையாளர் நல வாரியமும் அமைத்தார். பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.12,000ஆக உயர்த்தப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications