Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்.9ல் ஆரம்பம் - புதிய அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு கல்வியாண்டிலும் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு எந்த தேர்வும் எழுதாமல் தேர்ச்சி பெற்றனர்.

Revision test February and March new Time Table release on Education department

நடப்பாண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. செப்டம்பர் முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்களின் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.

அதன்படி முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3ஆம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. இதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியிலோ, மே மாதம் முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+