Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களை அலறவிடும் ‘டெங்கு’ பரவல்.. தினமும் 30+ பேருக்கு பாதிப்பு.. குழந்தைகள் உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சத்தமே இல்லாமல் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் டெங்கு வைரஸை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாக கூறப்படுகிறது.

Rising Dengue Cases in Chennai Spark Public Concern 30 Infected Daily

சென்னையில் டெங்கு பாதிப்பு

இந்நிலையில், சென்னையில் பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொசு ஒழிப்பு பணிகளில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு பாதிப்பை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. யாரிக்கேனும் டெங்கு பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மற்றும் தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். இவற்றில் ஒன்றிரண்டோ, அல்லது அனைத்து அறிகுறிகளுமோ ஏற்படலாம். அறிகுறிகள் இல்லாமலும் டெங்கு காய்ச்சல் ஏற்படக்கூடும்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

1. கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.. வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற நீர் தேங்கக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

2. டெங்கு கொசு என்று அழைக்கப்படும் ஏடீஸ் கொசு சுத்தமான தண்னீரில்தான் முட்டையிடும். அதனால் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிப்பது நல்லது.

3. குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஏடீஸ் கொசு பொதுவாக பகல் நேரத்தில் கடிக்கும். அதனால் பகலில் பள்ளிகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் பாதுகாக்க வேண்டும்.

4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+