1.5 கிலோ நகைகள் திருட்டு.. 5 மாசமாச்சு.. போலீஸ் அலட்சியம் காட்டுகிறது.. நடிகர் பார்த்திபன் புகார்
பார்த்திபன் வீட்டில் நகை கொள்ளை குறித்து போலீசில் புகார் அளித்தார்.
சென்னை: நகை திருடு போய் 5 மாசமாச்சு.. குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை.. எப்படியாவது இதில் நடவடிக்கை எடுங்கள் என்று நடிகர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வீடு திருவான்மியூர் மேற்கு காமராஜர் நகரில் உள்ளது. தனது வீட்டின் ஒரு போர்ஷனை ஆபீசாக பயன்படுத்தி வருகிறார் பார்த்திபன். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவர் வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் நடந்து விட்டது.
வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோ லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகையை ஆட்டைய போட்டு விட்டார்கள்.

2-வது புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், 2 மாசம் கழித்து அதாவது ஜூலை மாதம் இன்னொரு புகாருடன் வந்தார் பார்த்திபன்.

எப்படி மாயமானது?
அதில், வீட்டில் ஏற்கனவே திருடு போன நகைகளுடன் சேர்த்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும் மாயமாகி விட்டதாக சொல்லி இருந்தார். இதை கேட்டு அதிர்ந்த போலீசார், நகை எப்படி மாயமாகி இருக்கும் என்ற விசாரணையில் இறங்கினர்.

க்ளூ கிடைக்கவில்லை
ஆனால் வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்கப்படாமலேயே இந்த திருட்டு நடந்திருப்பதை பார்த்து போலீசார் இன்னமும் குழம்பி விட்டார்கள். அதனால் பார்த்திபன் வீட்டில் வேலை செய்பவர்கள், டிரைவர்கள் என எல்லோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியும் எந்த க்ளூவும் போலீசுக்கு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில்தான் பார்த்திபன் திரும்பவும் இன்னொரு புகார் அளித்துள்ளார்.

கமிஷனர் விஸ்வநாதன்
ஆனால் இந்த முறை அவர் நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். கமிஷனர் ஏகே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து நகைகள் திருட்டு போனது தொடர்பாக புகார் அளித்தார். நகைகள் மாயமாகி 5 மாசமாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

விசாரணை தீவிரம்
போலீசார் இந்த விஷயத்தில் காலந்தாழ்த்துவதாக பார்த்திபன் கூறியதாகவும் தெரிகிறது. எனினும் விரைவில் திருடியவர்களை கைது செய்வோம் என பார்த்திபனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications