Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துப்புரவு தொழிலாளி மகன் டூ ரோபோடிக்ஸ் சிஇஒ.. 'தமிழ் புதல்வன் திட்டம்' குறித்து நெகிழ்ச்சி பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தப்பட்ட "காலை உணவு திட்டம்" இரண்டும் என் போன்ற பல விளிம்பு நிலை மாணவர்களை, முதல் தலைமுறை பட்டதாரியாக நிச்சயம் மாற்றும் என ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO கென்னித்ராஜ் அன்பு பதிவிட்டுள்ளார்.

ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவியர் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை முன்பு முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த திட்டம் காரணமாக 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.

Robotics CEO Kennithraj Anbu praises Tamil Puthalvan Project and Breakfast Scheme for students

உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப்பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதனிடையே அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை-எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும்,அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களின் கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வியாண்டு முதல், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Robotics CEO Kennithraj Anbu praises Tamil Puthalvan Project and Breakfast Scheme for students

அடித்தட்டு மக்கள் அடிப்படை கல்வி பயில முன்வர வேண்டும் என்பதற்காகவும், ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காவும் கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு திட்டத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை அரசியல் கட்சி தலைவர்களை தாண்டி பலரும் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO கென்னித்ராஜ் அன்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆக அல்ல ! துப்புரவு தொழிலாளியின் மகனாக வாழ்வை துவங்கி இன்று ரோபோடிக்ஸ் & AI நிறுவன CEO ஆக மாரி இருக்கும் , தமிழ்நாடு அரசின் அரசுப்பள்ளி, சத்துணவு திட்டத்தால் பயனடைந்த மாணவனாக சொல்கிறேன், "தமிழ் புதல்வன் திட்டம்" விரிவு படுத்தபட்ட "காலை உணவு திட்டம்" இரண்டும் என் போன்ற பல விளிம்பு நிலை மாணவர்களை, முதல் தலைமுறை பட்டதாரியாக நிச்சயம் மாற்றும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+