‘ரூட்டு தல’ சண்டை.. கத்தி கட்டைகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. போலீசை பார்த்ததும் ஒரே ஓட்டம்!
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட 'ரூட்டு தல' பிரச்சனையால் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து ஒன்று அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில் நின்ற போது பேருந்தில் இருந்த ஒரு பிரிவு மாணவரை மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் கீழே கிடந்த கற்களாலும், மதுபாட்டில்களை கொண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவலின் பேரில் அரும்பாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும், மாணவர்கள் கையில் கத்தியோடும், கட்டைகளோடும் சாலையில் நாலாபுறம் தெறித்து ஓடினர். பேருந்துகளிலும் சிலர் ஏறி தப்பித்தனர். சில மாணவர்கள் சாலையில் செல்லும் ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார், 17 மாணவர்களை ரவுண்டு கட்டி பிடித்துள்ளனர். மாணவர்களிடையே விசாரணை நடத்தியதில், 'ரூட்டு தல' பிரச்சனை காரணமாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே 'ரூட்டு தல' பிரச்சனை ஏற்பட்டு, இரு பிரிவினர் மாறி மாறி வெட்டி கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டும் 'ரூட்டு தல' பிரச்சனையை தடுக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications