சென்னையில் போலீசார் அதிரடி என்கவுண்ட்டர்- ரவுடி சங்கர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அயானவரத்தில் போலீசார் நடத்திய எனகவுண்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரவுடி சங்கரை சுற்றி வளைத்தனர்.

Rowdy killed in police encounter at Chennai

அப்போது போலீசாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடி சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ரவுடி சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Rowdy killed in police encounter at Chennai

சங்கர் மீது 37 வழக்குகள்

சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி காவலர் சுப்பிரமணியன் மற்றும் ரவுடி துரைமுத்தும் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையில் என்கவுண்டர் நடைபெற்றது. இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+