Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பயங்கரம்! மனைவி கண் முன்னே சரமாரி தாக்குதல்.. அப்படியே சரிந்து விழுந்த ரவுடி ஓலை சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே வசித்து வருபவர் ரவுடி ஓலை சரவணன் (35). பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் நேற்று மாலை தனது மனைவியுடன் வீட்டின் அருகே உள்ள காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தாக கூறப்படுகிறது.

ஹெல்மெட் அணிந்து வந்த அந்த மர்ம நபர்கள், ரவுடி ஓலை சரவணனை சரமாரியாக வெட்டி உள்ளனர். மனைவி கண் முன்னே நடந்த இந்த கொடூர சம்பவத்தில் ஓலை சரவணன் அங்கேயே சரிந்து விழுந்தார்.

Rowdy Olai Saravanan murdered in public view near Thiruvanmiyur

ஓலை சரவணனை கொலை செய்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தனது கணவர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போன, ஓலை சரவணன் மனைவி இது குறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஓலை சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் இருந்து சிறை சென்று வெளியில் வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில், முன் பகை காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+