சென்னை ஏர்போர்ட்டில்... ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை-பவுடர் பறிமுதல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுமார் 25 கிலோ எடை கொண்ட ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை-பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Recommended Video

இதனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதேபோல் விமானத்தின் கழிவறையில் இருந்த ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

தீவிர சோதனை
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கா இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வலி நிவாரணி
அங்கு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 4 மரப்பெடிகள் கொண்ட பார்சல்கள் இருந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.அந்த பெட்டிகளின் மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டு இருந்தது.
|
25 கிலோ போதை மாத்திரை-பவுடர்
அந்த பெட்டிகளை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் உள்ளே சுமார் 25 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ.2.45 கோடி ஆகும். இதனை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கமும் பறிமுதல்
அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications