Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கிற்கு வரும் ரூ.2000.. உடனே இதை பண்ணாதான் கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வேளாண் நலத்திட்டங்கள் மற்றும் 'பி.எம் கிசான்' (PM Kisan) நிதியுதவியைப் பெறுவதற்கு உழவர் பதிவு என்பது இப்போது மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு விவசாயியும் 'விவசாயி அடையாள எண்' (Farmer Identification Number) வைத்திருப்பது இனி கட்டாயம். இந்த அடையாள எண் இல்லாத பட்சத்தில், அரசு வழங்கும் எந்தவொரு நிதி சார்ந்த சலுகைகளையும் பெற முடியாது என்ற அதிரடி மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

Narendra Modi PM Kisan

விவசாயிகள் PM கிசான் 22வது தவணைத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2026ம் ஆண்டின் முதல் தவணையான இது இந்த மாதம் வழங்கப்படும். அடுத்த தவணை எப்போது கிடைக்கும், பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயரை எப்படிச் சரிபார்ப்பது, மற்றும் ஆன்லைனில் பணம் பட்டுவாடா நிலையை எப்படி அறிவது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் முக்கியமான விவசாய நலத்திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM கிசான்), தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்குகிறது. விவசாய மற்றும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு இந்த உதவியை அளிக்கிறது.

உடனே அப்ளை பண்ணுங்க!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் இதுவரை 'விவசாயி அடையாள எண்' பெறாத விவசாயிகள், தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து ஐடியைப் பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு அலைய வேண்டிய அவசியமில்லை; ஆன்லைன் மூலமாகவே எளிதாக விண்ணப்பித்து இந்த அடையாள எண்ணைப் பெற்றுவிடலாம்.

PM கிசான் திட்டம்

PM கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வருமான ஆதரவு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாகப் பிரிக்கப்பட்டு, நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அரசு பல தவணைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இப்போது, 2025-ல் எதிர்பார்க்கப்படும் 22வது தவணை மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 20-30 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

ஒருங்கிணைக்கப்படும் வேளாண் தரவுகள்

தமிழகம் முழுவதும் 'வேளாண் அடுக்கு' (Agriculture Layer) எனும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் விவரங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தகுதியுள்ள உண்மையான விவசாயிகள் விடுபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இதற்காகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்:

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை

வேளாண் பொறியியல் துறை

வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித் துறை

வருவாய்த் துறை

இந்த ஐந்து துறைகளின் அதிகாரிகளும் ஒன்றிணைந்து, உண்மையான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களின் தரவுகளைச் சேகரித்து வருகின்றனர். எனவே, அரசு வழங்கும் சலுகைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகள், இந்த 'விவசாயி அடையாள எண்' பதிவை உடனே முடிப்பது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+