கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை!
சென்னை: அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்ட அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருவரும் நண்பர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 20), செப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 7-ம் தேதி இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டனர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இவர்கள் இருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் தொடர்பாக இரு தரப்பினரும் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் அர்ஜூனன், சூர்யா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உறவினர்கள் போராட்டம்
இந்த சம்பவத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாலிபர்களின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

உடல்கள் ஒப்படைப்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம், ரூ.5,000 மாத உதவி தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் நிவாரண காசோலையை வழங்கினார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications