சென்னை வியாசர்பாடியில் ரூ.5-க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வியாசர்பாடியில் ரூ5 க்கு மருத்துவர் பார்த்த புகழ்பெற்ற மக்களின் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் (வயது 70) காலமானார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பை 1973-ம் ஆண்டு நிறைவு செய்தார் திருவேங்கடம் வீரராகவன். அவர் தொடக்க காலத்தில் ரூ2 க்குதான் மருத்துவம் பார்த்தார்.

Rs 5 doctor dies in Chennai

சென்னை எருக்கஞ்சேரியிலும் வியாசர்பாடியிலும் 40 ஆண்டுகளாக ஏழைகளுக்காக மருத்துவர் பார்த்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம் வீரரராகவன். தமது நோயாளிகளிடம் ரூ5 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார்.

Rs 5 doctor dies in Chennai

இதனால் அப்பகுதி மக்களின் பெரும் மதிப்புக்குரிய மக்கள் மருத்துவராக திருவேங்கடம் வீரராகவன் திகழ்ந்தார். 2017-ல் அரசும் அவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது. தாம் அரசின் பணத்தில் படித்து மருத்துவரானவன்; ஆகையால் மக்களுக்காக குறைந்தபட்ச தொகையில் மருத்துவம் பார்க்கிறேன்; எதிர்ப்புகளைப் பற்றி கவலை இல்லை என உறுதியாக இருந்தவர் திருவேங்கடம் வீரராகவன்.

Rs 5 doctor dies in Chennai

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் மறைவால் எருக்கஞ்சேரி, வியாசர்பாடி பகுதி மக்கள் பெருந்துயரத்தில் மூழ்கி உள்ளனர்.

Rs 5 doctor dies in Chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+