ஜெயலலிதா பிறந்த நாள்.. விவசாயிகளுக்கான ரூ 6000 திட்டத்தை தொடங்கி வைத்தார் பியூஷ் கோயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ. 6000 நிதியுதவியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

Rs 6000 for farmers scheme is going to inaugurate today

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 அளிக்கும் திட்டம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

மொத்தம் மூன்று தவணைகளாக வழங்கு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க தமிழகம் வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகளுக்கான திட்டத்தை பியூஷ் கோயலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தொடங்கி வைத்தனர்.அப்போது பேசிய பியூஷ் கோயல், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததாக கூறினார். இதற்காக ஆண்டிற்கு 75 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகளை போன்று மீனவர்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திட்டத்தின் தொடக்க விழாவை பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+