பெண்களுக்கான ரூ 6000 உதவித்தொகை! மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: கருவுற்ற பெண்களுக்கு ரூ 6000 மத்திய அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற ஆதார் கார்டு கட்டாயமில்லை என சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ 6 ஆயிரத்தை பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணை திட்டம்தான் இந்த வந்தனா யோஜனா திட்டம். கர்ப்பிணிகளுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு வகையான நோய்களையும் தடுக்க நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு கர்ப்பிணிகளுக்கு குறைந்தபட்சம் 19 வயது இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஆப்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். அதாவது நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 தவணைகளில் பணம் கிடைக்கும்.
முதல் தவணை ரூ 1000, இரண்டாவது தவணை ரூ 2000, மூன்றாவது தவணை ரூ 3000 என பணம் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக கர்ப்பிணிப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த திட்டம் பற்றி கூடுதல் தகவல்களை அறிய வேண்டுமானால் https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் பெண்கள் ஏதாவது பிரச்சினையை எதிர்கொண்டால் 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயனாளியின் ஆண்டு வருமானமானது 8 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். உங்களிடம் பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால், இந்தத் திட்டத்தின் தகுதியான பலன்களைப் பெறலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ 500, ரூ 1000 பண மதிப்பிழப்பு செய்த நிலையில் அடுத்த ஆண்டே 2017இல் ஜனவரி 1 ஆம் தேதி இந்த ரூ 6000 திட்டத்தை அறிவித்தார்.
-
கழுதை மேய்த்தால் ரூ.50 லட்சம்.. மத்திய அரசு தரும் மானியம்.. ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு மெகா முடிவு? சென்னை டூ அமெரிக்கா டிக்கெட் விலை குறையுமா -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications