Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு நேரில் விரைந்த ஆர்.எஸ்.பாரதி.. தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சென்றனர். அமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரபப்பு நிலவுகிறது.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

RS bharathi and paranthamen mla went to minister senthil balaji house while ed raid

செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில், வருமான வரித்துறையாக இருந்தாலும், அமலாக்கத்துறையாக இருந்தாலும், எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சற்று முன்பு திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் திடீரென பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு வெளியே இருந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் உள்ளிட்ட திமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+