Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 வருமா? மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வட்டமிடும் அந்த "கண்கள்".. அதிரடி அறிவிப்பு வரப்போகிறதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவரும் நிலையில், இன்றைய தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகிறார்கள்.

 rs1000 Magalir Urimai thogai and Will Tamil Nadu CM MK Stalin issue key orders to ministers on Womens Entitlement project

அப்பீல்: மகளிர் உரிமைத்தொகை: இதனிடையே, இந்த விவகாரத்தில், அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கடந்த வாரம், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்திருந்தார். விண்ணப்பிக்கும், ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதால், யாருடைய பெயரும் விடுபடாது என்று உறுதி தந்துள்ளார்.

ஆவேசம்: எனினும், ஆனால், பொதுமக்களிலேயே ஒருசாரார் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. மேல்முறையீடு செய்தும்கூட, அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்களாம். இதனால், உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள், போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. .

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. அந்தவகையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசப்படும் என்று தெரிகிறது.. முக்கியமாக, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக இந்த திட்டத்தில் இறங்கியிருப்பதால், பெண்களுக்கு அதிருப்தி ஏற்படாதவகையில், அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்படுமாறு அறிவுறுத்தலாம் என்கிறார்கள். மேலும், அதிகாரிகள் யாராவது அலட்சியமாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்பெஷல் செய்தி: அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு நாம், ஒரு ஸ்பெஷல் செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அதாவது, இந்த உரிமைத்தொகை திட்டம் குறித்து, ரகசியமாக ஒரு சர்வே எடுக்கும்படி, தன்னுடைய சம்பந்தி குடும்பத்தினர் தரப்பினரிடம் பொறுப்பை தந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

இந்த திட்டம், பெண்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது ? அதிருப்தி இருக்கிறதா? என்பது குறித்து சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம்.
மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளவர்களின் லிஸ்ட் வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறாராம் எடப்பாடி. அந்த பட்டியலை வைத்து, பயன்பெற்றவர்கள் யார் யார் அறிய விரும்புகிறாராம்.

எதிர்க்கட்சிகள்: இதற்கிடையே, அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி, பாஜகவும் இந்த விஷயத்தை கையிலெடுத்து உள்ளது.

எனவே, உரிமைத்தொகை திட்டத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் எந்தவிதமான அரசியலும் செய்துவிடக்கூடாது என்பதிலும், கூடுதல் கவனத்தை முதல்வர் இனி செலுத்த போவதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமாகவும், இன்றைய தினம் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள். அந்தவகையில், இன்று நடக்கபோகும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்ல, இந்த உரிமைத்தொகை திட்டத்தினால், மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், மாற்றங்கள், இந்த திட்டத்தினால் பலன்பெற்றவர்கள், என அனைத்தையும் அறியவும் திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் இதை வைத்தே அரசியல் செய்ய காத்திருப்பதால், இந்த திட்டத்தை வைத்தே, ஸ்கோர் செய்யவும் திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால், மகளிர் உரிமை தொகை திட்டம், இன்னும் வேகமெடுக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+