Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ரூபாய் இருக்கா? வருடம் ரூ.436 மட்டும் கட்டினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் காப்பீட்டு திட்டம் குறித்து தெரியுமா? அதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?

பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு, சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.. அதில் ஏராளமான மக்களின் ஆதரவை பெற்றது, மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமாகும்.. விபத்துக்கான காப்பீடு திட்டம், இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டமாகும்.

rs20 PMSBY scheme by Central Government and banks will deduct rs456 in Pradhan Mantri Suraksha Bima Yojana

ஏழை எளிய மக்கள் அனைவரும் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, கடந்த 2015-ம் ஆண்டு இந்த காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு வருடத்திற்குள் தற்செயலான மரணம் மற்றும் இயலாமை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது.

விபத்துகள் : இந்த திட்டத்தின்மூலம், Accidental Death காப்பீட்டின்படி, ஒரு நபர் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.. Total Disability காப்பீட்டின்படி, விபத்து ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்து இருந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.. Partial Disablity காப்பீட்டின்படி, விபத்து மூலம் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து இருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

ஆனால், தற்கொலை செய்து கொண்டால், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தினால் எந்த பயனும் இல்லை.. ஆனால், கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால் காப்பீடு கிடைக்குமாம்.. அதேசமயம், ஊனமுற்றோர் இதில் பயன்பெற முடியாது..

20 ரூபாய்: வெறும் 20 ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் வருட சந்தா வெறும் ரூ.436 மட்டுமேயாகும்.. இதற்கு வருடச் சந்தா ரூ.20 ஆகும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் தொகையை மாற்றுவார்கள்.

அதுமட்டுமல்ல. 18 வயது நிரம்பியவர்கள் முதல் 70 வயது உடையவர்கள் வரை இத்திட்டத்தின் பயன்பெறலாம். அத்துடன், இந்த திட்டத்தை வருடந்தோறும் புதுப்பிக்கவும் முடியும்.. இந்த திட்டத்தில் முதிர்வு தொகையாக எதுவுமே கிடைக்காது. வங்கி அல்லது தபால் துறையில் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாதிட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீங்க சேர விரும்பினால், தபால் துறை மற்றும் வங்கிகளை அணுகலாம்..

விண்ணப்பம்: sms அல்லது நெட் பேங்கிங் மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்... அல்லது இதற்கெனவே உள்ள அதிகாரப்பூர்வ வெப்சைட்களிலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, உங்கள் வங்கியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+