Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.8000 பரிசா? நிலுவை சேர்த்து மக்களுக்கு வேண்டும்: அரசுக்கு பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதன் காரணமாக தற்போது ரூ.3 ஆயிரம் தமிழக அரசு அறிவித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து வருகிறார்.. இந்நிலையில், தமிழக பாஜகவும் மிக முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளது.. இது மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

rs80000 gift ration card holder pending dues 8000

இந்த தொகையானது இதுவரை அறிவிக்கப்பட்ட பொங்கல் ரொக்கப் பரிசுகளில் அதிகமான தொகையாகும். அதாவது கடந்த முறை எடப்பாடி பழனிசாமி அறிவித்த தொகையைவிட அதிகமாகும்.

5 ஆயிரம் பொங்கல் பரிசு

எனினும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பினால் திருப்தியடையவில்லை.. இந்த முறை மக்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.. இது தொடர்பாக போஸ்டர்களையும் அடித்து ஒட்டி வருகிறார்கள்..

இப்படிப்பட்ட சூழலில் தமிழக பாஜக, திமுக அரசுக்கு மற்றொரு கோரிக்கையை வைத்துள்ளது.. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்..

பரிசுடன் ரூ.8000

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல் திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல் பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 2021ல் பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2022, 2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2024ல் பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியது. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது.

நிலுவை தொகை, பரிசுத் தொகை 8 ஆயிரம் ரூபாய்

தமிழகத்தின் அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது வருந்தத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் நான்காண்டுகளாக நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொள்கிறது" என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு தொகையை தரமானதாகவும், ஊழலின்றியும் வழங்க வேண்டும் என்று நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி தர வேண்டும் என்று மீண்டும் பாஜக விடுத்துள்ள இந்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+