ஆர்எஸ்எஸ் மதசார்பு நாடாக அறிவிக்க சொன்னது.. இந்திய அரசமைப்பையே ஏற்கவில்லை - ஜவாஹிருல்லாவின் ரீவைண்ட்
சென்னை: அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம் என குடியரசு தின வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முகக் கலாச்சாரமும் இந்தியத் தேசத்தின் இரு கண்களாக இருக்கின்றன. அவற்றைப் பேணிப் பாதுகாப்பதே நமது தலையாயக் கடமையாகும். அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கி உள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்.

விடுதலை பெற்ற இந்தியாவிற்கான ஓர் அரசு உருவாக்கப்பட்ட வேளையில், நமது விடுதலைப் போராட்ட வீரர்களால் நிரம்பி இருந்த அரசமைப்பு சபை நமது அரசு நிர்வாகத்தின் அடித்தளமாக மதச்சார்பின்மை அமையும் என நிர்ணயித்தனர். அனைத்துப் பெண்களுக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சம வாக்குரிமை வழங்குவதை அங்கீகரிக்காமல் மதச்சார்புள்ள நாடாக இந்தியா உருவாக வேண்டுமென்று அப்போது ஆர்.எஸ்.எஸ் எழுப்பிய குரல் நிராகரிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற, தாராளமயமான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற வகையில் நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இத்தகைய அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வெளிப்படையாகவே எதிர்த்து அதன் வார இதழில் தலையங்கமே எழுதியது. 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள்வதன் மூலமாகவே இந்தியாவின் எதிர்காலத்தைச் சிறப்பானதாகக் கட்டமைக்க முடியும். ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளும் முழுமையாக மதிக்கப்படுகிற போது தான் குடியரசு அதன் உண்மையான அர்த்தத்தைப் பூர்த்தி செய்யும்.
இந்திய அரசியலமைப்பு உருவாகுவதற்கு உன்னதப் பங்களிப்புகளை வழங்கிய மேதைகள் அனைவரையும் இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து அவர்களின் நோக்கத்தை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம். விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் உண்மையான வளர்ச்சி பெறவும் சாதி மத மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இந்தியாவோடு கரம் கோப்போம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications