"பன்றி".. காரணமே பாஜகதான்.. ஸ்டாலினை பற்றி கேட்டதுமே.. திருமாவளவனுக்கு வந்த ஆவேசம்.. ஸ்பெஷல் தோழமை
பாஜக அரசியல் மீது சரமாரி விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளார் திருமாவளவன்
சென்னை: பாஜகவுக்கு திமுக ஒருபோதும் பணிந்து போனதில்லை.. இனியும் போகாது.. அதற்கான அவசியமும் இல்லை.. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு முக்கிய காரணமே இந்த பாஜகதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் போட்டு தாக்கி உள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

சரவெடி திருமா
அப்போது அவரிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம்.. திமுக கூட்டணி கட்சிகளுக்கு, திமுகவை நேரடியாக விமர்சிப்பதில் ஒரு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே.. தமிழகத்தில் குண்டுவெடிப்பு, 6 பேர் கைது போன்றதொரு சம்பவங்கள் கடந்த கால ஆட்சியில் நடந்திருந்தால், திருமாவளவனோ, பாலகிருஷ்ணனோ அதை எதிர்கொண்டிருக்க கூடிய முறையே வேறு.. எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட நிறைய விமர்சனம் செய்து கொண்டிருந்த நீங்கள், ஆளும் கட்சியான பிறகு எதிர்க்க தயங்குவதாக கூறப்படுகிறதே? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எப்படி உள்ளது என்பன போன்ற கேள்விகளை நாம் முன்வைத்தோம்.. அதற்கு திருமாவளவன் தந்த பதில்தான் இது:

திருமாவளவன்
"நாங்கள் கூட்டணி கட்சியாக இருக்கிறோம், தோழமை கட்சியாக இருக்கிறோம்.. அப்படி இருக்கும்போது, ஏன் நாங்கள் நெகட்டிவ்வாக திமுக அரசை அணுக வேண்டும்? தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்ட நாங்கள் தயங்கியது கிடையாது.. அதேமாதிரி நெகட்டிவ்வாகவே பேச வேண்டும் என்ற அவசியமும் இல்லையே.. ஒரு காரியத்தை 2 விஷயமாக அணுகலாம்.. ஒன்று, அச்சுறுத்தி, பணிய வைப்பது.. இன்னொன்று, நட்பாக, அன்பாக, தோழமையுடன் சாதிக்க வைப்பது.. எந்த இடத்தில் நமக்கு தோழமை இல்லையோ, அந்த இடத்தில் எதிர்ப்பை காட்ட வேண்டியதுதான்.. இது ஒன்றும் திருமாவளவனின் இயல்பு மட்டும் இல்லை.. இது தான் ஒட்டுமொத்த மனித இயல்பும்..

தில் + துணிச்சல்
ஆட்சியின் தவறுகளை, நாங்கள் நட்பாக எடுத்து சொல்லக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது.. உடனுக்குடன் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கிறது.. சுட்டிக்காட்டுவதற்கான துணிச்சலும் இருக்கிறது.. 10 ஆயிரம் பேரை திரட்டி, ஸ்ரீமதி விஷயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோதேம, இந்த திமுக ஆட்சியில் தானே? கிருஷ்ணகிரியில் தலித்கள் கொல்லப்படுகிறார்கள், காவல்துறையினர் ஒருசார்பாக செயல்படுகிறார்கள் என்ற புகார் வந்ததே அங்கும்தானே 10 ஆயிரம் பேருக்கு மேல் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தோமே.. திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கும்போதுதானே?

பாலகிருஷ்ணன்
திமுக கூட்டணியில் இருக்கும்போதுதான், எந்த தவறு நடந்தாலும், அறிக்கைகளை வெளியிட்டு சுட்டிக்காட்டி உள்ளோம்? அதுக்காக பகையின் அடிப்படையில்தான் ஒன்றை எடுத்து சொல்ல வேண்டும் என்றில்லை.. சண்டை போட்டுதான் சொல்ல வேண்டும் என்றில்லை.. ஆளும்கட்சி அணியிலேயே நாங்கள் உள்ளதால் எளிதில் அவர்களை சந்தித்து பிரச்சனையை பேச முடிகிறது.. மனுவாக தருகிறோம்.. தோழமையுடன் பேசுகிறோம்.. அவையில் சுட்டிக்காட்டுகிறோம்.. அறிக்கைகளை வெளியிடுகிறோம்.. மின்கட்டண உயர்வுக்குகூட பாலகிருஷ்ணன் திரும்ப பெற வேண்டும் என்றார்.. விசிகவும்தான் அதை சொன்னோம்..

பக்கத்து வீட்டுக்காரர்
ஆளும்கட்சியாக அதிமுக இருந்தபோதும், இப்படித்தான் தோழமையுடன் சுட்டிக்காட்டினோம்.. திமுக கூட்டணிக்குள் அதாவது ஒரே குடும்பத்தில் இருக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒரு பிரச்சனையை சொல்வதற்கும், குடும்பத்துக்குள்ளேயே அந்த பிரச்சனையை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவுக்கு இல்லை.. ஆனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்றுதான் பாஜக இங்கு செயல்பட்டு வருகிறது.. வன்முறைகளை தூண்டி, திமுகவை சீண்டி, திமுகமீது ஏதாவது குறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள்..

நெருடல்
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.. போலீசுக்கு பாஜகவில் உள்ளவர்களே சவால் விடுகிறார்கள்.. எந்த பொறுப்பிலும் இல்லாத பாஜக தொண்டர்கள்கூட, "எங்களுக்கும் திமுகவுக்கும்தான் சண்டை, நீ ஒதுங்கிடு" என்று போலீசுக்கு சவால் விடுகிறார்கள்.. இதை அண்ணாமலையும் செய்கிறார், சாதாரண பாஜக தொண்டர்களும் செய்கிறார்கள்.. வெளியில் காலை நீட்டி வம்புக்கு இழுக்கும் போக்கு இது என்பார்கள்.. அதனால் சட்டம் ஒழுங்கில் திமுக மீது பெரிய நெருடல் இல்லை.

"பன்றி "
இப்படி பாஜக வம்புக்கு இழுப்பதை, ஆளும் கட்சியான திமுக கண்டுகொள்வதில்லை.. எதிர்வினையாற்றக்கூடிய அளவுக்கு பாஜகவுக்கு திமுக முக்கியத்துவம் தருவதில்லை.. "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடம்கொடுக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம், பேச வேண்டாம்" என்று முதல்வரே அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளர்.. "சாக்கடை அல்லது சேற்றில் புரண்டு எழுந்து வருகிற ஒன்று" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் "பன்றி " என்று எழுதவில்லை..

சாக்கடை
"சாக்கடை அல்லது சேற்றில் புரண்டு எழுந்து வருகிற ஒன்று நம்மை பார்த்ததும் சிலிர்த்து காட்டுகிறது என்றால், நாமும் அதற்கு முன்னால் சிலிர்த்து காட்டக்கூடாது, ஒதுங்கிதான் போக வேண்டும், நம் மீது சேறு படக்கூடாது.. மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் முதல்வர் அந்த அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.. இதை எப்படி பார்ப்பது? பாஜகவுக்கு திமுக பணிந்து போகிறதா? ஒதுங்கி போகிறதா? இதை புரிந்து கொள்பவர் பார்வையை பொறுத்தது" என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications