ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நெருக்கமானவர்.. முரசொலிக்கு பதில்
சென்னை: மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆடல் அரசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வாட்ஸ் அப்பில் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது. அதில், நம் உயிர் உள்ளவரை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நுழையக் கூடாது- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என தகவல் இடம் பெற்றது.

நெருக்கமான தொடர்பு
இதனை மறுத்து தமிழக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் ஆடல் அரசன் வெளியிட்ட அறிக்கை: முரசொலியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்- ஆர்.எஸ்.எஸ். குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அது பொய்யான தகவல் மட்டும் இல்லாமல், முத்துராமலிங்க தேவர் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

முத்துராமலிங்கம் சொன்னது
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2-வது தலைவர் கோல்வால்கர் 51-வது பிறந்த நாள் விழா 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெற்ற கோல்வாகர் பிறந்த நாள் விழாவுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை வகித்தார். இந்த விழாவில் பேசிய முத்துராமலிங்க தேவர், தம் கருத்துகள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் இணைந்தே இருக்கின்றன என்றார்.

வெட்கக் கேடானது
உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்கள் மற்றும் தெய்வ பக்தர்களால் மதிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தார் என்பது பொய்யானது. ஆர்.எஸ்.எஸ். குறித்து தவறான எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த திமுக, அதன் முரசொலி நாளேடு முயற்சிப்பது வெட்கக் கேடானது.

கண்டிக்கத்தக்கது
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியானது, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஆடல் அரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடி வருகை தரக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதனையொட்டி பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனை முன்வைத்து முரசொலி இந்த தகவலை வெளியிட்டிருந்தது.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications