சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி கட்டாயம்!.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்கும் கலைஞர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் கொரோனா தடுப்பூசியும் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இருப்பினும், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் சின்னத்திரை அல்லது திரைப்பட கலைஞர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications