எம்எல்ஏ கூட ஆக முடியல.. இன்னும் 2 மாசம்தான்.. அண்ணாமலை சிறை செல்வார்.. எஸ்.வி.சேகர் விமர்சனம்
சென்னை: காவல் நிலையத்தில் திருடர்களுடன் பழகிய அண்ணாமலைக்கு 100 ஓட்டு கூட கிடைக்காது என நடிகர் எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்து வருகிறார். தற்போது அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். ஆனால் அவரை அவரது சொந்த கட்சியினரே விமர்சிக்கும் நிலை எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர் தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகிறார். ட்விட்டர் ஸ்பேஸில் அண்ணாமலைக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி பேசி வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு இரு பக்கமும் "அடி" என்பதை போல் அதிமுக, திமுக, சொந்த கட்சியினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.
முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். மேலும் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புதுவையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அவருக்கு சமூகவலைதளங்களிலும் விமர்சனங்கள் குவிகின்றன.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக அதிரடியாக பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் காவல் நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை. அவர் மோடி, அமித்ஷாவை விட தான்தான் பெரியவர் என கருதுகிறார். தன்னை விட பெரியவர் யாரும் இல்லை என்றும் எண்ணுகிறார்.
பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். பாஜக மாநில தலைவராக இருந்து எம்எல்ஏவாக கூட ஜெயிக்க முடியவில்லை. இதில் அவர் பின்னால் 25 எம்பிக்கள் இருப்பார்கள் என நினைக்கிறார். அவரால் 25 எம்பிக்கள் முன் நின்று போட்டோ மட்டுமே எடுக்க முடியும். அண்ணாமலை முயற்சியால் 100 ஓட்டுகள் கூட பாஜகவுக்கு கிடைக்காது.
2 மாதத்தில் அண்ணாமலை எங்கே போவார் என தெரியவரும். அவர் சிறைக்கு செல்வாரா இல்லை கட்சியை விட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே பல பேட்டிகளில் அண்ணாமலை விரைவில் பதவிநீக்கம் செய்யப்படுவார் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலைக்கு பதில் வானதி சீனிவாசன், கல்யாண ராமன், ஆர்எஸ்எஸ் நல்லகண்ணு, நயினார் நாகேந்திரன் ஆகிய 4 பேரில் யாராவது ஒருவர் தமிழக பாஜக தலைவராக வருவார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் அவர் வேறு கட்சியை தொடங்கும் அளவுக்கு பணம் இருப்பதாகவே எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?










Click it and Unblock the Notifications