ஏன்! ஜன 1 டூ டிச. 31 வரை லீவு கேளுங்க.. பசங்க உருப்படுவாங்க.. பொங்கல் லீவு குறித்து எஸ் வி சேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதை கிண்டல் செய்து எஸ் வி சேகர் சர்ச்சை ட்வீட் செய்துள்ளார்.

வரும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முதல் நாளான நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

S.Ve. Shekher tweet controversial about pongal leave

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஏன் 14 ம் தேதி. ஜனவரி முதல் தேதி முதல் டிசம்பர் 31 வரை லீவு கேளுங்க. சம்பளம் வீடு தேடி வரும். ஆனா பசங்க உருப்படுவாங்க என நக்கலாக தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்துள்ளதை எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணியில் உள்ள பாமகவும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+