Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை மேம்பாலம்.. சென்னை அண்ணா சாலையில் ஜனவரியில் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை இடையே அமைக்கப்படும் இரும்பு பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது தூண்களுக்கு இடையே 'டெக்' என்ற உத்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கி செயல்பட்டு வருகிறார். வருகிற ஜனவரி 7-ந்தேதிக்குள் மேம்பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணியை முடித்து, அனைத்து சாலை தடுப்புகளையும் அகற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.

சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 3.2 கி.மீ. தூரத்துக்கு ரூ.621 கோடியில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடித்தளம் அமைக்கும் பணி 98 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.

Saidapet-Teynampet flyover Good news coming in January on Chennai Anna Salai

ஈரடுக்கு மேம்பாலம்

இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள மெட்ரோ இரயில் பாதையின் மேலேயே அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கீழ்த்தளத்தில் எப்போதும் போல் சாலைப் போக்குவரத்து இருக்கும். முதல் தளத்தில் மெட்ரோ இரயில் பாதை இருக்கும். இரண்டாம் தளத்தில் புதிய நான்கு வழி மேம்பாலம் அமைக்கும்.மெட்ரோ தூண்களுக்கு இடையே கூடுதல் தூண்களை அமைத்து, அவற்றின் மேலே பாலத்தைத் தாங்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


ஸ்டீல் காம்போசிட் கர்டர்கள்

பாலத்தின் பகுதிகள் பாலத்திற்கு வெளியிலுள்ள ஒரு தொழிற்சாலையில் முன்கூட்டியே வார்ப்பு செய்யப்பட்டு, பின்னர் கட்டுமான இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டு வருகின்றன. லான்ஜிங் கிரிட்ஸ் எனப்படும் இந்த தொழில் நுட்பம் மூலம் தூண்களுக்கு இடையே உள்ள இடைவெளி இணைக்கப்படும். இங்கு மெட்ரோ பாதையின் மேலே பாலத்தை அமைக்கும்போது அதிக எடை இருக்கக்கூடாது என்பதற்காக, சில பகுதிகளில் எடை குறைந்த அதே சமயம் அதிக வலிமை கொண்ட ஸ்டீல் காம்போசிட் கர்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

டெக் என்ற உத்திரம்

இதற்கான முன்வார்ப்பு கான்கிரீட் கட்டமைப்புகள் குஜராத், சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தயாரித்து, இங்கு எடுத்து வந்து இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தூண்களுக்கு இடையே 'டெக்' என்ற உத்திரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கான்கிரீட் கட்டமைப்புகள் முறையாக பொருத்தப்பட்டனவா?, முடிந்த பணிகள், இனிமேல் நடக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

ஜனவரி 7ம் தேதி வரை கெடு

வருகிற ஜனவரி 7-ந்தேதிக்குள் மேம்பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணியை முடித்து, அனைத்து சாலை தடுப்புகளையும் அகற்ற உத்தரவிட்டிருக்கிறோம். இதனால் அண்ணாசாலையில் பணிகள் நடக்கும் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அடியோடு குறையும். அடித்தளம் வலுவான தூண்களில் டெக் அமைக்கும் பணியை வேகப்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+